புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2014


ஜனாதிபதி மஹிந்தவுடன் நேரடியாக பேசுங்கள்
இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய மத்திய
அரசு நேரடியாகப் பேச வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

``தமிழக அரசியல் கட்சிகள் மீண்டும் மீண்டும் குரல் கொடுத்தபோதும் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது நின்றபாடில்லை.

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்து விட்டேன் என சில நாட்களுக்கு முன்பு இலங்கை ஜனாதிபதி தெரிவித்தார். அப்போதே அதனை ஏமாற்று நாடகம் என நான் கூறியிருந்தேன். அதை உண்மையாக்கும் விதத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேரடியாகப் பேசி மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ad

ad