புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2014


நோர்வே தூதுக்குழு யாழ். வருகை
இலங்கைக்கான நோர்வே தூதுவர் உள்ளிட்ட குழுவினர் இன்று யாழிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
கிளிநொச்சிக்கு நேற்று திங்கட்கிழமை விஐயம் செய்த நோர்வே தூதுவர் யு.என்.டி.பி. நிறுவனத்தினால் நோர்வே அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டதுடன் அதன் முன்னேற்றங்கள் பற்றியும் கலந்துரையாடினார். பின்னர் முழங்காவில் பிரதேசத்தில் நோர்வே அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வரும் பால் சேகரிப்பு நிலையம், கண்டாவளை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வெல்ல உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றையும் பார்வையிட்டதுடன் இன்று காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனை சந்தித்துப் பேசிய பின் யாழிற்கு வருகை தரவுள்ளனர்.

ad

ad