இஸ்லாமிய சமூகமே! இப்போதாவது விழித்தெழு! தமிழர்களோடு ஒன்றுபடு தமிழர்களாக அல்ல மனசாட்சி உள்ள மனிதர்களாக (ஆதித்தன்)
இந்த சுயநலவாத உலகத்தினால் அங்கீகரிக்கப்படாத தமிழர்களின்
தமிழீழம் என்ற நாடு சிங்களப்பேரினவாதிகளின் கைகளில் வீழ்ந்து ஐந்து
ஆண்டுகள் கடந்துவிட்டது சிங்களக்கொடுங்கோல் அரசினால் தமிழர்களின் நியாயமான
கோரிக்கைகளும் போராட்டங்களும் பயங்கரவாதம் என்ற கொடிய போர்வையால்
மூடப்பட்டு நசுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது.
தமிழினத்தை காலம் எல்லாம் கதறித்துடிக்கும் அளவு வலிகளையும்
வேதனைகளையும் கொடுத்த சிங்களதேசம் தமக்குத்தாமே வீரர்கள் என்றும் தீரர்கள்
என்றும் புகளாரம் சூடிக்கொள்ளும் அதேவேளை அநீதிக்கெதிராக குரல்கொடுக்கும்
அத்தனை தமிழர்களையும் பயங்கரவதிகள் என்று சிறைப்பிடித்துக்கொண்டே
இருக்கின்றது .காலமுழுதும் தாமே பெரும்பான்மையானவர்கள் என்றும் தமிழ்
முஸ்லீம் மக்கள் சிறுபான்மையானவர்கள் என்றும் அவர்கள் இந்த நாட்டின்
குடிமக்களே! அன்றி அதிகாரத்தில் அமர்ந்துகொள்ள தகுதியற்றவர்கள் என்ற ஒரு
தோற்றப்பாட்டினை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது
பௌத்த சிங்களப்பேரினவாத அரசும் அதன் பரிவாரங்களும்.
இலங்கைத்திருநாட்டினை தனிச்சிங்களத்தீவாக மாற்றிவிடவேண்டும் என்ற ஒரு
நப்பாசையுடன் ஆங்கிலேயர்கள் வெளியேறியகாலம் தொட்டு இன்று வரைக்கும் பல
இழிவான செயல்களையும் படுகொலைகளையும் சிங்கள அரசு செய்துகொண்டே வருகின்றது.
அதை எதிர்க்கும் யாரையும் இதுவரைக்கும் அது விட்டுவைத்ததில்லை இனியும்
விட்டுவைக்கப் போவதும் இல்லை. எனவே சிறுபான்மை இனங்கள் என்று
அடையாளப்படுத்தப்பட்ட இந்த தமிழர்களினதும் இஸ்லாமியர்களினதும்
எதிர்காலம் கேழ்விக்குறியாகவே உள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு இரண்டு
சிறுபாண்மையினரும் கைசேர்த்துக்கொண்டால் நிசயமாக பெரும்பாண்மை என்று தம்மை
உயர்த்திக்கொள்ளும் சிங்களத்திற்கு சமனான ஒரு அரசியல் உரிமைகளையும்
அதிகாரத்தினையும் எட்டிவிட முடியும். ஆனால் இந்த சிறுபான்மை இனங்கள் என்று
குறிப்பிடப்படுகின்ற தமிழர்களுக்கும் முஸ்லீம்கள் என்று தம்மை
அடையாளப்படுத்திக் கொள்ளும் இஸ்லாமியர்களுக்கும் அதிகமான வேறுபாடுகள் இல்லை
ஆனால் ஏனோ நாம் தமிழர்கள் என்பத இன்னமும் இந்த இஸ்லாமியர்கள்
ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள் நாம் பேசும் மொழிதான் தமிழே அன்றி நாம்
பாரசீகர்கள் அரேபியர்கள் பாகிஸ்தானியர்கள் என்று இஸ்லாம் என்ற மதத்துக்குள்
நிற்கின்றார்களே தவிர தாம் ஒரு மனிதர்கள் என்பதைக்கூட மறந்து
வாழ்கின்றார்கள் காரணம் முள்ளிவாய்க்காலிலே எமது உறவுகள் அய்யோ, என்று
கதறிய அபயக்குரல்கள் பாக்குநீரினையும் தாண்டி தமிழகம் எங்குமே ஒலித்தது
ஆனால் அருகில் இருக்கும் இந்த முஸ்லீம்கள் காதுகளில் விழவில்லை இஸ்லாம்
என்ற ஒன்று அவர்கள் செவிப்பறைகளை மூடிவிட்டது கிழக்குமாகணத்தில் கடந்த
தேர்தலின் போது நேசக்கரம் நீட்டிய தமிழர்கள் முகத்தில் கரிபூசிய இந்த
இஸ்லாமிய சமூகம் அன்று எவரை தமது சொந்தம் என்று கூறியதோ எவரைதமது
நண்பர்கள் என்று கூறியதோ அவர்களினாலே இன்று அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின் றனர் இது( கெடுவான் கேடு நினைப்பான் ) என்ற பழமொழியை நினைவு படுத்துகின்றது.
இஸ்லாமிய சமூகமே உனக்கும் எனக்கும் என்ன பகமை பேசும் மொழி ஒன்று ஆனால்
நீயும் நானும் வேறு வேறு என்று சொல்லி தமிழின அழிப்புக்கு துணைபோன
இஸ்லாமிய சமூகமே உனக்கு ஈழத்தமிழினம்மீது
ஏன் இவளவு வெறுப்பு எம் இனம் அழிக்கப்பட்டபோது நீ மௌனமாக
இருந்ததுமட்டுமல்லாது உலகத்தின் அனைத்து முஸ்லீம்நாடுகளும்
கண்டுகொள்ளகூடாது என்று எத்தனையோ இழிச்செயல்களை செய்தாய். பல பொய்யான
பரப்புரைகளை செய்தாய் உன் இதயம் எங்கே? உலகத்தில் உன்னதமனிதனான முகமது நபி
அவர்கள் போதித்த போதனைகள் எல்லாம் மறந்துவிட்டு நீ இஸ்லாமியர்கள் நாங்கள்
என்று சொல்வது ஏற்றுக்கொள்ளவே முடியாது .உன்மையான இஸ்லாமியனாக நீ
இருந்திருந்தால் சிங்கள அரசின் தமிழின அழிப்பிற்கு துணைபோயிருக்க
வாய்ப்பில்லை ரத்தமும் சதையுமாக தமிழர்கள் சிதறடிக்கப்படபோது அவர்கள்
முஸ்லீம்கள் அல்ல இஸ்லாமியர்கள் அல்ல தமிழர்கள் என்று மௌனம் காத்தது
மட்டுமல்லாது அவர்களுடன் இணைந்து திரைமறைவில் செயற்பட்டீர்கள் ஏன்
எங்கள்மீது இவளவு கோபம் வெறுப்பு இதற்கெல்லாம் உங்களிடம் இருக்கும்
விடைகள் எமக்கும் தெரியும். கிழக்குமாகனத்தில் நடந்த படுகொலைகள்
யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்களின்
வெளியேற்றம் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்களை நீங்கள் அடிக்கிக்கொண்டே
செல்லலாம் ஆனால் உன்மையினை புதைத்துவிட்டு போன தலைமுறையின குரோதங்களை இன்றய
தலைமுறைக்கும் ஊட்டி ஊட்டி வளர்த்துக்கொண்டுருப்பவர்கள் நீங்கள் அன்றி
தமிழர்கள் அல்ல இணையத்தளங்களில் புலிகளால் செய்ய்ப்பட்ட கொலைகள் என்றும்
தமிழர்களால் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் என்றும் காணொளிகளையும்
புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து உலகம் முழுதுமே
பரப்பிகொண்டிருப்பவர்கள் நீங்களே அன்றி தமிழர்கள் அல்ல. உன்மையில்
உங்களைவிட நாங்கள்தான் கோபப்படவேண்டும் காரணம் விடுதலை வேண்டி எங்கள்
போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் எம் விடுதலைப்போராட்டத்தினை
மழுங்கடிக்கும் இழிவான செயல்களை
செய்தவர்கள் நீங்கள் கிழக்குமாகனப்படுகொலைகள் என்று
பட்டியலிட்டுக்காட்டும் இஸ்லாமிய சமூகமே அந்த அல்லாமீது
ஆணையிட்டுச்சொல்லுங்கள் கிழக்கு மாகானத்தின் கொல்லப்பட்டது
நீங்கள்மட்டும்தானா எத்தனை தமிழர்களை கொன்று குவித்தீர்கள்
ஊர்காவற்படைகளுடனும் சிங்கள இரானுவத்துடனும் இணைந்து
நீங்கள் செய்த படுகொலைகள் எத்தனை? அந்த எல்லாம் வல்ல அல்லாவுக்கு அது தெரியும் அவன் ஒரு நீதிபதி அவன் எல்லோருக்கும் பெதுவானவன்
நிச்சயமாக அவன் தமிழர்களை தண்டிக்கவோ வஞ்சிக்கவோமாட்டன்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றினார்கள் வெளியேற்றினார்கள் என்று
கூச்சலிடும் உங்கள் மனசாட்சியை கேழுங்கள் எதற்காக
வெளியேற்றப்பட்டீர்கள் என்பதை சொல்லும் உன்மையிலே பிரபகரனோ தமிழர்களோ
பயங்கரவாதிகளாக இருந்தால் இன்று புத்தளம் மன்னாரில் இருக்கும் எந்த ஒரு
முஸ்லீமும் உயிரோடு இருந்திருக்க மாட்டீர்கள் காரணம் பேரீச்சம்
பழவண்டிகளிலே நீங்கள் தமிழர்களை அழிப்பதற்காக ஆயுதங்களை கொண்டுவந்து
பதுக்கிவைத்தபோது அதை அறிந்த பிரபாகரன் கிழக்குமாணத்தில் நடந்ததைப்போல
வன்முறைகள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காகவே உங்களை உடனடியாக
வெளியேற்றினார்
ஆனால் நீங்கள் ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவனாக நின்ற அந்த பெரு
விருட்சத்தினை பயங்கரவதி என்று அழித்தொழிக்க சிங்கள இனவாதிகளுடன் கை
சேர்த்து நின்றீர்களே! புலிகள் பயங்கரவாதிகள் என்று புலிகளையும்
தமிழ்மக்களையும் வேறுபடுத்தினீர்களே நாங்கள் பயங்கரவாதிகள் என்றால் நீங்கள்
யார்?தமிழர்கள் உங்களை படுகொலை செய்தார்கள் என்றால் நீங்கள் தமிழர்களுக்கு
செய்தது என்ன இரண்டு பக்கமுமே தவறுகள் உள்ளது இதுகூட சிங்கள அரசின்
சூழ்ச்சி என்பதை பலமுறை உங்களிற்று சுட்டிக்காட்டியும் நீங்கள்
ஏற்றுக்கொள்வதாக இல்லை இன்னும் ஒருபடி மேல் ஏறி தமிழர்களுக்கு கொடுமைகள்
செய்தீர்கள்.
இதை எல்லாம் இப்போது நினைவுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று
நினைக்கலாம் ஆனால் இது காலத்தின் கட்டாயமான ஒன்று இதை தெளிவுபடுத்த
வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது சிங்களவர்களோடு சேர்ந்து தமிழர்களை
புதைகுழிகளுக்குள் தள்ளினீர்கள் நாங்கள் எழுந்து நிற்பதற்கு
போரடிக்கொண்டிருக்கின்றோம் நீங்கள் புதைகுழிகளுக்குள்
தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றீ ர்கள் எங்கள் கரங்கள் உங்களுக்காக
நீட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றது ஆனால் நீங்களோ எங்கள் தலையிலே தொப்பிகள்
இல்லை என்று மறுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் கடந்தகாலத்தில் எங்களுக்கு
நீங்களும் உங்களுக்கு நாங்களும் செய்த தவறுகளை மறந்து இன்றைய
யதார்த்தத்தினை உணர்ந்து செயற்படுவோம் .
கொட்டி கொட்டி என்றும் புலிப்பயங்கரவாதம் என்றும் சிங்களத்திற்கும்
சிங்களச்சிப்பாய்களுகளுக்கும் குடைபிடித்த நீங்கள் இன்று சிங்களத்திற்கு
வேண்டதவர்கள் காரணம் புலிகள் இருந்தவரைக்கும் உங்கள் ஒத்தாசையும்
காட்டிக்கொடுப்புக்களும் அவசியமான ஒன்றாக அவர்களுக்கு இருந்தது ஆனால் இன்று
புலிகள் இல்லை எனவே நீங்களும் எமக்கு கட்டுப்பட்டு வாழவேண்டும் என்று
சிங்களத்தின் வல்லாதிக்க சக்திகள் உங்கள்மீது
திணிக்கப்பட்டுக்கொண்டிருக்கின் றது அதை எதிர்பதன் விழைவுகள்
தமிழர்களைவிட உங்களுக்கு மோசமானதாக இருக்கும் காரணம் எமக்கான தனைவனாக
பிரபாகரன் இருந்தான் இருக்கின்றான் ஆனால்
உங்களிற்கென்று நீங்கள் சொல்லும் அரோபியாவோ பாலஸ்தீனமோ பாகிஸ்தானோ
வரப்போவதில்லை ஆனால் ஒரு இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற
வகையிலே தமிழர்களாகிய நாங்கள் உங்களைப்போன்று கண்மீமூடித்தனமாக
இருக்கப்போவதும் இல்லை.
நாங்கள் மனிதர்களா என்று உங்கள் மனச்சாட்சியினை கேழுங்கள்
அளுத்கம் பேருவளையில் மூன்று முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கும் வெறும்
மூவாயிரம் பேர் அகதியாக்கப்பட்டதிற்கு நீங்கள் இது இன அழிப்பு
என்றும் எங்களுக்கு ஆயுதம் தாருங்கள் எங்களை நாங்களே
பாதுகாத்துக்கொள்கின்றோம் என்றும் கதறுகின்றீர்களே!! ஒன்றரை லட்சம்
தமிழர்கள் கொல்லப்பட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள்
அகதிகளாக்கப்பட்டபோதும் உங்களுக்கு அது இன அழிப்பு என்று ஏன் தெரியவில்லை
தமிழர்கள் ஆயுதம் எடுத்தது சரி என்று ஏன் தோன்றவில்லை கடந்தகாலங்களை
விடுவோம் இப்போது போர்க்குற்ற விசாரணைகள் தலைதூக்கி உள்ளபோது தமிழினம்
உலகத்தில் எங்கெல்லாமோ வாழ்ந்துகொண்டிருக்கும் நியாயவாதிகளையும்
அகிம்சாவாதிகளையும் தட்டி எழுப்பிக்கொண்டிருக்கின்றனர் உலகத்தின் அத்தனை
கதவுகளையும் நீதிக்காக தட்டிக்கொண்டிருக்கின்றனர் எம்மோடு அருகில்
இருக்கும் நீங்கள் மௌனம் காப்பதும் தியாணம் கொள்வது முறைதானா நபிகள்
நாயகத்தின் போதனைகள் எங்கே ?
அழுத்கமவிலும் பேருவளையிலும் நீங்கள் தாக்கப்படுகின்றீர்கள் என்ற
செய்திகள் காதுகளில் எட்டியவுடன் இந்த சுயநலவாத உலகில் வாழும் சாதாரண
மனிதன் என்ற வகையில் அது எமக்கு சிறு மகிழ்ச்சியை கொடுத்தாலும்
வாடியபயிரைக்கண்டபோதெல்லாம் மனம் கலங்கித்துடிக்கும் தமிழர்கள் என்ற
வகையில் ஆத்திரப்பட்டோம் எம்மைப்போல ஒரு இனம் வதைபடுவதை நாம் எப்போதுமே
அனுமதிக்கப்போவதில்லை எமது கண்டனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் உங்களுக்காக
செய்தோம் இனியும் செய்வோம் உங்கள் கரங்கள் எங்களோடு இணைந்து கொள்ளுமானால்.
தினம் தினம் முள்ளிவாக்காலிலும் நந்திக்கடலிலும் எலும்புக்
கூடுகளாக்கப்பட்ட தமிழர்களின் உடமைகளை சிங்கள இரானுவத்தின் அனுமதியோடு
அள்ளிச்சென்ற உங்களுக்கு நிச்சயம் தெரியும் போர் நடைபெற்ற தடையங்கள்.
ஒவ்வெரு ரூபாய்களாக சேமித்து வாங்கிய வாகனங்கள் எல்லாம் எரியூட்டப்பட்டு
இரும்பு விலைகளுக்கு வாங்கிச்சென்றவர்கள் நீங்கள் உங்களிற்கு தெரியும்
போரிழப்பு என்ன என்பது ஆனாலும் வாய் திறக்கவில்லை இன்றும் கூட உங்கள் மீது
கட்டவிள்த்துவிடப்பட்ட அரச பயங்கரவாதம் தொடர்ந்துகொண்டே சொல்கின்றது
ஆனாலும் உங்கள் அமைச்சர்கள் அரசை காட்டிக் கொடுக்கமாட்டோம்
என்று கொக்கரித்த வண்ணம் இருப்பது உங்களிற்கான புதைகுளிகளை நீங்களே தாயார்
செய்வதைப்போலாகும் மே 18இல் புலிகள் அழிக்கப்பட்டார்கள்
பயங்கரவாதம் வீழ்த்தப்பட்டது என்று சாரயப்போத்தல்களும் குளிர்பாணங்களும்
அள்ளி அள்ளி கொடுத்து சிங்களவர்க்ளோடு சேர்ந்து நீங்கள் கொண்டாடியது தமிழின
அழிப்பு
நாள் அல்ல அது முஸ்லீம்களின் படுகொலைக்கான ஆரம்பநாள் என்பதை இப்போதாவது உணர்ந்துகொள்ளுங்கள் .
நான் முஸ்லீம் என்ற மதவாதத்தினையும் இனவாததிமையும் மறந்து உன்மையான
இஸ்லாத்தின் போதனைகளையும் நபிகள் நாயகம் காட்டிய பாதையினையும் பின்பற்றும்
ஒரு உன்மையான இஸ்லாமியனாக இனியேனும் செயற்படுங்கள் உங்களை அல்லா
காத்தருள்வான் சிங்களத்தினால் உருவாக்கப்படும் மதவாதிகளுக்கும்
இனவெறியர்களுக்கும் எதிராக போராட நீங்கள் தமிழர்களோடு இணைந்துகொள்ளுங்கள்
தமிழர்களாக அல்லாவிட்டாலும் சாதாரண மனிதர்களாகவேனும்.