புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2014

 

 

சிறிலங்காவுக்கு எதிராக யுத்துக் குற்ற விசாரணைகள் இடம்பெறுகின்றமைக்கு புறம்பாக, சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் உதவி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  

இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கு மறுத்து வருகிறது.

இந்த நிலையில் பான் கீ மூன் இவ்வாறு உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஐக்கிய நாடுகளின் வெளிவிவகார திணைக்களத்தின் குழுவினை அனுப்பவுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதிநிதி பாலித்த கோஹன்னவிடம் இன்னர்சிட்டி பிரஸ் இணையத்தளம் வினவிய போது, அவர் அதற்கு பதில் வழங்காத போதும், இந்த விடயத்தை நிராகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ad

ad