புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2014

மதுரையில் மாணவிகள் மீது ஆசிட் வீசியது 
கூலிப்படை! : அதிர்ச்சி தகவல்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரி திருமங்களத்தில் உள்ளது. இந்த கல்லூரியில் முதலாமாண்டு ஆங்கில இலக்கியம்
பயின்ற மீனா மற்றும் அவரது தோழி அங்காள ஈஸ்வரி. இவர் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.  இவர்கள் இன்று பிற்பகல் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் மீனா, அங்காளேஸ்வரி மீது ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.

இந்த தாக்குதலில் ஒரு மாணவியின் கண் பார்வை பாதிக்கப்பட்டது. மற்றொரு மாணவிக்கு உடலில் காயம் ஏற்பட்டது.  மாணவிகள் இருவரும்  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

 தென்மண்டல போலீஸ் அதிகாரிகள் மதுரை அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு, பாதிக்க ப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவர் சதீஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அவர் கொடுத்த தகவலின்படி, மாணவிகள் மீது ஆசிட் வீசியது கூலிப்படை என தெரியவந்துள்ளது.  அந்த கூலிப்படை பற்றியும், அவர்களை அனுப்பியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ad

ad