புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2014


திருநெல்வேலி மேயர் வெற்றி அறிவிப்பு: ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு: தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ்
திருநெல்வேலி மாநகர மேயராக புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வானதாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேயர் பதவிக்கான தேர்தலில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த சையது அலி பாத்திமா இந்த மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தேர்தல் விதிகளின்படி, எனது வேட்பு மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்திருந்தேன். இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலின்படி, எனது விவரம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்திருந்தேன். இருப்பினும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை எனக் கூறி எனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் நிராகரித்து விட்டார்.

மேலும், இரு வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்ற நிலையில், புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்திருக்கிறார். தேர்தல் நடைபெறும் வரை காத்திருந்திருக்க வேண்டும். அதிமுக வேட்பாளரை போட்டியின்றித் தேர்வு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், எனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் தள்ளுபடி செய்திருக்கிறார். 

ஆகவே, திருநெல்வேலி மேயராக புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், தேர்தல் நடத்தும் அலுவலரான திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ad

ad