இந்திய மீனவர்கள் 14 பேர் நெடுந்தீவில் கைது
இந்திய மீனவர்கள் 14 பேர் எல்லை தாண்டி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் இன்று கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் 14 பேர் எல்லை தாண்டி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் இன்று கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 3 படகுகளில் வந்த 14 இந்திய மீனவர்கள் இன்று பகல் கடற்படையினரால் நெடுந்தீவு பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காரைநகர் பகுதியில் கடற்படையினரால் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தற்போது நீரியல் வளத்துறைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஏற்கனவே கைது செய்யப்பட்ட 24 மீனவர்களும் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.