புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2014

பிரபா பிறந்தநாள் தடை விதிக்கவும்-சுப்பிரமணிய சுவாமி 

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் எதிர்வரும் 26-ம் திகதி தமிழகத்தில் கொண்டாடப்படுவதைத் தடுக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பா. ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் சுவாமி விடுத்துள்ள அறிக்கையில், ம.தி.மு.க. சார்பில் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி தியாகத் திருநாள் பிரகடன விளக்கப் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தகைய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள வைகோவின் ம.தி.மு.க தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். வைகோவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்

இந்திய அரசியல் சட்டம் 256ன் படி மத்திய அரசின் நிர்வாக அதிகாரத்துக்குத் தடை யாகவோ, பாரபட்சப்படுத்தும் வகையிலோ மாநில அரசின் நிர்வாகம் செயல்படக் கூடாது.

பிரபாகரன் பிறந்தநாள் விழாவிற்கான கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த அறிக்கையில்  சுவாமி வலியுறுத்தியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட் டுள்

ad

ad