புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2014

யாழ்ப்பாணத்தில் நேற்று வீதிச் சோதனைகள்
தமிழீழ மாவீரர் தினம் இம் மாதம் 27-ம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், யாழ்.குடாநாட்டில் வீதிகள், பொது இடங்கள் அனைத்திலும் படையினர் நிலை நிறுத்தப்பட்டிருப்பதுடன், நேற்றைய  தினம் தொடக்கம் விசேட அதிரடிப் படையினரின் சோதனை நடவடிக்கைகளும் உச் சக்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்மாதம் தொடர்ச்சியாக சகல இடங்களும் படையினர் மற்றும் புலனாய்வாளர்களால் அவதானிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று முதல் குடாநாட்டில் அதியுச்சமாக வீதிகள், பொது இடங்கள் அனைத்திலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டு படையினர் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

கடந்த வருடத்தைப் போன்று குடா நாட்டின் பல ஆலயங்களுக்குச் சென்ற படையினர் 27-ம் திகதி நடைபெறவிருக்கும் அனைத்து பூஜை வழிபாடுகளையும், நிறுத்த வேண்டும் என கூறியிருக்கின்றனர்.

மேலும் இளைஞர்கள் அதிகம் கூடி நிற்கும் சனசமூக நிலையங்கள் மற்றும் பொது இடங்க ளில் 27-ம் திகதி எவரும் நிற்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று  யாழ்.பல்கலைக்கழகம், மற்றும் மாணவர் விடுதி ஆகியவற்றை சுற்றி துவிச்சக்கர வண்டிகளில் பெருமளவு படையினர் உதிரிகளாக களமிறக்கப் பட்டிருப்பதுடன், யாழ்.பிறவுண் வீதி, இராமநாதன் வீதி, பலாலி வீதி, சிவனம்மன் கோவிலடி போன்றவற்றிலும் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே விசேட அதிரடிப்படையினரின், சோதனை நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் 27-ம் திகதி இத்தகைய கெடுபிடிகள் இன்னமும் அதிகரிக்கப்படலாம் என மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளமையி னைக் காண முடிகின்றது

ad

ad