புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2014

நடிகை டிஸ்கோ சாந்தி சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதி 
நடிகை டிஸ்கோ சாந்தி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக, சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

தமிழ் பட உலகில் கவர்ச்சி நடன நடிகையாக இருந்தவர், டிஸ்கோ சாந்தி. இவர், மறைந்த நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி வந்த அவர், தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

டிஸ்கோ சாந்தி-ஸ்ரீஹரி தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். ஸ்ரீஹரி கடந்த வருடம் அக்டோபர் மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கணவரின் மரணம், டிஸ்கோ சாந்திக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து டிஸ்கோ சாந்தியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருடைய கல்லீரல் பழுதுபட்டது. உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை தொடர்ந்து டிஸ்கோ சாந்தி சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறது. டிஸ்கோ சாந்தியை அவருடைய தங்கை லலிதகுமாரி அருகில் இருந்து கவனித்து வருகிறார்.

ad

ad