புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2014

முதலிடத்தில் அஞ்சலோ மெத்யூஸ்
சர்வதேச அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.
 
அதில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான தரப்படுத்தலில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
 
இந்த தரப்படுத்தலில் பாகிஸ்தான் அணியின் மொஹமட் ஹசிப் இரண்டாம் இடத்திலும், பங்களாதேஷ் அணியின் ஷகிப் ஹல் ஹசன் மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளார். இலங்கை அணியின் டி.எம்.டில்ஷான் ஐந்தாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
 
இதேவேளை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ஒரு நாள் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார்.
 
சர்வதேச ஒரு நாள் ஆட்டங்களில் இரண்டு முறை இரட்டைச்சதம் அடித்து உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா, 15-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஷிகர் தவன் ஐந்தாவது இடத்திலும், டோனி ஏழாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
 
இலங்கை அணியின் லஹிரு திரிமன்னே நான்கு இடங்கள் முன்னேறி 46-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
 
பந்து வீச்சாளர்களில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் எட்டாவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா பத்தாவது இடத்திலும் உள்ளனர். அஸ்வின் 15-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ad

ad