புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2014

நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி வதந்தி! நடிகை திரிஷா மறுப்பு!
நடிகை திரிஷாவுக்கும், தமிழ் பட தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சென்னையில் செவ்வாய்க்கிழமை நிச்சயதார்த்தம் நடந்ததாக பரபரப்பு செய்தி வெளியானது. 

இதுகுறித்து திரிஷா கூறியதாவது, எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி வதந்திதான். இந்த வதந்தி எங்கிருந்து கிளம்பியது என்று தெரியவில்லை. என் திருமண நிச்சயதார்த்தம் என்பது என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளாக இருக்கும். அதை சந்தோஷமாக அறிவிக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

பாலகிருஷ்ணாவுடன் தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு அரக்கு வேலியில் நடந்தது. அந்த படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து கொண்டு இருந்த எனக்கு நிச்சயதார்த்தம் எப்படி நடந்து இருக்க முடியும். இவ்வாறு திரிஷா கூறினார்

ad

ad