புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2014

மாகாண சபைகளில் வீழ்ச்சி ஆரம்பம்: வடமத்திய மாகாண அமைச்சர் பதவி நீக்கப்பட்டார்
வடமத்திய மாகாண கூட்டுறவு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பேஷல பண்டார ஜயரத்ன அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாகாண சபைகளில் பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சி இரு கூறுகளாக பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
வடமத்திய, வடமேல் உள்ளிட்ட நான்கு மாகாணங்கள் ஆளும் கட்சியின் பிடியை விட்டுச் செல்லக் கூடும் என நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

ad

ad