புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

பல்கலைக்கழகத்தில் துண்டுப்பிரசுரம்

தாயகம் மலர தன்னுயிர் தந்த தமிழீழ வீரர்களிற்கு எங்களின் கண்ணீர் சிந்திய வீர வணக்கங்கள் என மாவீரர்களிற்கு வணக்கம் செலுத்தப்பட்டு யாழ்.பல்கலைக் கழகத்தில் துண்டுப்பிரசுரங்கள்  ஒட்டப்பட்டுள்ளன.

இத் துண்டுப்பிரசுரங்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் கட்டடங்களில் நேற்றையதினம் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.

மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டே இத்துண்டுப்பிரசுரங்கள் மாவீரர் வாரம் ஆரம்பமாகிய நேற்றைய தினம் ஒட்டப்பட்டுள்ளன.

மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு விட லாம் என்ற அச்சத்தில் பல்கலைக்கு முன் பாக இராணுவம் நிலை கொண்டுள்ள நிலையில் பல்கலை விடுமுறைகளிற்கு மத்தியி லுமே இத் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் கார்த்திகை 27 என தலைப்பிடப்பட்டு நடுவில் விடுதலைப்புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டு  அதன் கீழ் தாயகம் மலர தன்னுயிர் தந்த தமிழீழ வீரர்களுக்கும் அரச பயங்கரவாதத்தினால் கொல்லப்பட்ட எம்மவர்களுக்கும் எங்களின் கண்ணீர் சிந்திய வீர வணக்கங்கள் என எழுதப்பட்டு இறுதியில் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என எழுதப்பட்டுள்ளன.

ad

ad