புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2014

அமைச்சர் நவீன் திசாநாயக்க பதவி விலகினார்! பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு
அரச முகாமைத்துவ அமைச்சர் நவீன் திசாநாயக்க, தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வார் என பேசப்பட்ட முக்கிய அமைச்சர்களில் நவீன் திசாநாயக்க முக்கியமானவர்.
அந்த வகையில் இன்று தாம் அமைச்சுப் பதவியை துறப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும் இதுவரை காலமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தொகுதி அமைப்பாளராக கடமையாற்றி வந்த நவீன் அந்தப் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
ஆளும் கட்சியில் வகித்து வந்த சகல பதவிகளையும் நவீன் ராஜினாமா செய்துள்ளார்.
நாளை உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சியில் நவீன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக நவீன் அறிவிப்பு!
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக நவீன் திசாநாயக்க அறிவித்துள்ளார்.
நேற்றிரவு பதவியை ராஜினாமா செய்த நவீன், மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ad

ad