முரண்பாட்டை ஏற்படுத்தவே விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் பிரேமதாஸ வழங்கினாராம்
விடுதலைப் புலிகளுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தவே தமது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, கோபால சாமி மஹேந்திரராஜாவுக்கு ஆயுதங்களை வழங்கினார் என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹராமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டை பிளவுபடுத்துதற்காக அல்ல.
விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தவே மஹேந்திரராஜாவுக்கு ஆயுதங்களை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கம், பிரேமதாஸ விடுதலைப்புலிகளை சக்தி மயப்படுத்தியதாக குற்றம் சுமத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மஹேந்திரராஜா, 1978ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தார்.
இதன்பின்னர் 1989இல் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1994ஆம் ஆண்டு அவர் விடு தலைப் புலிகளால் மரணதண்டனைக்கு உட் படுத்தப்பட்டார் என அவர் கூறினார்
திஸ்ஸமஹராமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டை பிளவுபடுத்துதற்காக அல்ல.
விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தவே மஹேந்திரராஜாவுக்கு ஆயுதங்களை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கம், பிரேமதாஸ விடுதலைப்புலிகளை சக்தி மயப்படுத்தியதாக குற்றம் சுமத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மஹேந்திரராஜா, 1978ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தார்.
இதன்பின்னர் 1989இல் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1994ஆம் ஆண்டு அவர் விடு தலைப் புலிகளால் மரணதண்டனைக்கு உட் படுத்தப்பட்டார் என அவர் கூறினார்