புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2014

அவளின் வைராக்கியம் என்ற மெகா தொடரில் பிரதான பாத்திரத்தில் மைத்திரி 
news
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பாத்திரமானது மெகா தொலைக்காட்சி நாடகத்தின் பிரதான பாத்திரத்திற்கு ஒப்பானது என அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மைத்திரிபால சிறிசேனவின் வரலாறு குறித்து அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. எனினும் அவரது தற்போதைய செயற்பாடுகள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதுடன் எதிர்காலம் குறித்து கவலையையும் ஏற்படுத்துகிறது.
அவரது செயற்பாட்டை, புரியும் மொழியில் கூற வேண்டுமாயின் இது மெகா தொலைக்காட்சி நாடகம்.
அந்த நாடகத்திற்கு இன்னமும் பெயரிடப்படவில்லை. ஆனாலும் அதற்கு அவளின் வைராக்கியம் என்று பெயர் வைக்குமாறு நான் யோசனை கூறுகிறேன்.
இந்த தொலைக்காட்சி நாடகத்தின் தயாரிப்பாளர்கள் இலங்கையர்கள் அல்ல. இந்து சமுத்திரத்திற்கு அப்பால் பலமிக்க நாடுகளின் நபர்கள்.
நாடகத்திற்கான கதை, திரைக்கதை வசனத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எழுதியுள்ளார்.
பிரதியாக்கம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க. நாடகத்தின் சண்டை இயக்குநரை எதிர்காலத்தில் காண முடியும்.
இவ்வாறான கதாபாத்திரங்களை ஏற்கும் கலைஞர்கள் தற்போது தயாராகி வருகின்றனர் என அமைச்சர் டளஸ் அழகபெரும மேலும் தெரிவித்துள்ளார். 

ad

ad