புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2014

ஐ.எஸ்.ஐ.எஸ். அரக்கர்களினால் 18 வீரர்களின தலை துண்டிப்பு
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். 

அங்கு தங்களை எதிர்ப்பவர்கள் மற்றும் மலைவாழ் பழங்குடிகள் மற்றும் சிறுபான்மை இனத்தவர்களை கொன்று குவிக்கின்றனர்.

சிறுபான்மை இன பெண்களை கடத்தி சென்று அடிமைகளாக விற்கின்றனர். மேலும் தங்களை எதிர்க்கும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பிணைக்கைதிகளை கடத்தி சென்று தலை துண்டித்து படுகொலை செய்கின்றனர்.

அதை வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி ஏற்ப டுத்துகின்றனர்.

நேற்றுமுன்தினம் சிரியாவில் அமெரிக்காவை சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர் பீட்டர் எட்வர்டு காஸ்சிக் என்பவரை தலை துண்டித்து கொலை செய்தனர்.

இந்த வீடியோவை வெளியிட்டு அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

அதே வீடியோ வில் சிரியாவை சேர்ந்த 18 இராணுவ வீரர்களின் தலைகளை துண்டித்தும் படுகொலை செய்த கொடூர காட்சி இடம் பெற்றிருந்தது.

இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். 18 சிரியா இராணுவ வீரர்களும் மண்டியிட்டு கத்தியுடன் நிற்கும் தீவிரவாதிகள் அவர்கள் தலை துண்டித்து கொலை செய்யும் கொடூர காட்சி இரத்தத்தை உறைய வைப்பதாகவுள்ளது.
 

ad

ad