புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

நானே பொது வேட்பாளர்: செய்தியாளர் சந்திப்பில் மைத்திரிபால சிறிசேன


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளராக பெயரிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த தீர்மானித்துள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜீ20 குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலளார் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்தேன்.
அமைச்சராக பதவி வகித்த போது இவ்வளவு அழுத்தங்கள் என்றால் நாட்டு மக்கள் எவ்வாறான அழுத்தங்களை எதிர்நோக்குவார்கள் என எனது குடும்ப உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் பராவாயில்லை நாட்டு மக்களுக்கு நன்மை செய்யுமாறு மனைவி பிள்ளைகள் கோரியிருந்தனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால் 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வேன். 17ம்திருத்தச் சட்டத்தை மீளவும் அமுல்படுத்துவேன்.
நிறைவேற்று அதிகாரத ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் ரத்து செய்வேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ad

ad