புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

ஐ.தே.க.நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார ஆளுங்கட்சியில் இணைவு- மாலைக்குள் இணைவோருக்கு 150 கோடி ரூபா
ஐக்கிய தேசியக்கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார சற்று முன்னர் அலரிமாளிகைக்கு வருகை தந்துள்ளார்.
இவர் தனது கட்சியை விட்டு ஆளுங்கட்சியில் இணைந்து கொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அமைச்சுப் பதவியொன்றுக்கும் நியமிக்கப்படவுள்ளார்.
நேற்று மாலை பாலித ரங்கே பண்டாரவுக்கும் , அமைச்சர் பசில் ராஜபக்ஷவுககும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது 25 கோடி ரூபா கைமாறியதை அடுத்தே பாலித ரங்கே பண்டார ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ள தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவுக்கு ஐம்பது கோடி விலை பேசப்பட்ட போதிலும் அவர் ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ள மறுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளுங்கட்சிக்கு இழுத்தெடுக்கும் முயற்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.
இன்று மாலைக்குள் ஆளுங்கட்சியுடன் இணைந்து கொள்ள சம்மதம் தெரிவிக்கும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 150 கோடி வீதம் அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும் ஜனாதிபதி தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளுக்காக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் ஒரு குழு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ad

ad