புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2014

காணாமற்போனார் முன்னாள் போராளி 
அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் காணாமற்போயுள்ளதாக
யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
குருநகர் ஐந்து மாடிகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோனிமுத்து அன்டன் ஜெயரோன் (வயது 31) என்பவரே காணாமற்போயுள்ளார்.
 
நேற்று முந்தினம் 12.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவிலும்,யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
2011 ஆம் ஆண்டு இவர் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ad

ad