எச்சரிக்கை விடுத்த சரத்குமாருக்கு விஷால் பதில்
நேற்று திருச்சியில் சரத்குமார் விஷால் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப் படுவார் என எச்சரிக்கை விடுத்ததற்கு விஷால் தனது பதிலை அனுப்பியுள்ளார்.
'' நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவேன் என்ற செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தச் செய்தி எனது சினிமா வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நடிகர் சங்கத்தின் மீதும் சங்கத்தின் முடிவுகள் மீதும் மதிப்பு வைத்திருப்பவன் நான். நான் சங்கத்தை குறித்து அவதூறாக பேசியதற்கு தக்க சான்று வேண்டும்.
நடிகர் சங்க நிர்வாகிகளான ராதாரவி, கே.என்.காளை ஆகியோர் என்னைப் பற்றி அவதூறாகப் ’நாய்’ என்ற வார்த்தை உபயோகித்து பேசியுள்ளனர். அதற்கு விளக்கம் கேட்பது தவறா? கேள்வி கேட்பது தவறா?.
ரூல் எண் :13ன் படி சங்க உறுப்பினரை அவதூறாக பேசினால் அது தண்டனைக்குறியது . இதே நடவடிக்கைதான் குமரிமுத்து அவதூறாக பேசிய தருணத்தில் எடுக்கப்பட்டு சங்கத்தை விட்டு நீக்கப்பட்டார்.
இதே நடவடிக்கைதான் ராதாரவி மற்றும் கே.என்.காளை மீதும் எடுக்கப்படவேண்டும்.
என்னை சங்கத்தை விட்டு நீக்கினால் கவலையில்லை. ஆனால் என்னைப் பற்றி பேசிய அவதூறு பேச்சுகளுக்கு விளக்கம் அளிக்கவேண்டும் '' என விஷால் தெரிவித்துள்ளார் .