புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2014


புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவேன்; என்கிறார் ரணில் 
கட்சி அரசியலுக்கு பதிலாக புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்க பாடுபட போவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட அதிகாரசபை கூட்டம் கலிகமுவ பிரதேசத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
 
மேலும், கட்சி அரசியலைக் கலைத்து புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கவே பாடுபட்டு வருகின்றோம்.
 
எதிர்வரும் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, மகிந்த அரசிற்கு சவால் விடும் வகையில் எதிர்கட்சி பொது வேட்பாளராக ஆளும் கட்சியில் முக்கிய பதவிகளை வகித்த மைத்திரிபால சிறிசேனவை நிறுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ad

ad