புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2014

எமது ஆட்சியில் சர்வதேசத்தில் எஞ்சியுள்ள புலிகளும் அழிக்கப்படுவார்கள்!- சஜித் எம்.பி. சபதம்
எதி­ர­ணியின் புதிய ஆட்­சியில் சர்­வ­தேச ரீதியில் எஞ்­சி­யுள்ள விடு­தலைப் புலிகள் முழு­மை­யாக ஒழிக்­கப்­ப­டு­வார்கள். எனவே, இலங்­கையில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்த முடி­யு­மென்ற புலி­களின் கனவு ஒருபோதும் நிறை­வேறப் போவ­தில்­லை­யென உறு­தி­ய­ளிக்­கின்றேன் என ஐ.தே.க. வின் பா.உ. சஜித் பிரே­ம­தாஸ சபையில் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற வரவு செலவு திட்டம் மீதான நிதி­ய­மைச்சு தொடர்­பான குழு­நிலை விவா­தத்தில் உரை­யாற்றும் போதே சஜித் பிரே­ம­தாஸ எம்.பி. இவ்­வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;
எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் எதி­ர­ணியின் வெற்றி நிச்­ச­யிக்­கப்­பட்­டது.  அவ்­வாறு வெற்றி பெற்­றதன் பின்னர் நாட்­டையோ அர­சாங்­கத்­தையோ நிர்­வ­கித்த தலை­வர்­க­ளையோ அல்­லது படை­யி­ன­ரையோ ஒருபோதும் காட்டிக் கொடுக்­க­மாட்டோம்.
எதி­ரணி வெற்றி பெற்­ற­வுடன் மீண்டும் சதி செய்து தனி­நாட்டை உரு­வாக்­கிக்­ கொள்ள முடி­யு­மென்ற சர்­வ­தேச புலிகள் கனவு காண்­பார்­க­ளாயின் அது ஒரு போதும் நிறை­வே­றாது.  அது மட்­டு­மல்ல எதி­ரணி ஆட்­சியில் சர்­வ­தேச ரீதியில் எஞ்­சி­யுள்ள விடு­தலைப் புலி­களை ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும்.
ஜனா­தி­பதித் தேர்­தலில் எதி­ரணி வெற்றி பெற்றால் அது தலைவர் மற்றும் படை­யினர் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றங்­க­ளுக்கு கொண்டு செல்­லப்­ப­டு­வார்கள் என்ற பிர­சாரம் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.
நடை­பெ­ற­வி­ருப்­பது தேசிய தேர்­த­லொன்றே தவிர சர்­வ­தேச தேர்­த­லொன்­றல்ல. அதற்கும் சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜனா­தி­பதி தேர்­தலில் எதிர்க்­கட்சி நிச்­சயம் வெற்றி பெறும். அப்­படி வெற்றி பெறும் போது நாட்­டையோ அரசை நிர்­வ­கித்த தலை­வர்­க­ளையோ அல்­லது படை­யி­ன­ரையோ நாம் ஒரு போதும் காட்டிக் கொடுக்­க­மாட்டோம்.
நாட்டை விற்கும் கூட்டம் நாங்கள் அல்ல எதிர்க்­கட்­சி­யினர் வெற்றி பெறு­வ­தானால் அரச தலை­வர்­களை படை­யி­னரை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­திற்கு கொண்டு செல்வோம் என்ற கனவை சர்­வ­தேச புலிகள் காணலாம். அப்­ப­டி­யான கனவு ஒரு போதும் நிறை­வேறப் போவ­தில்லை என்­பதை ஐ.தே. கட்­சியின் பிர­தித்­த­லைவர் இங்கு உறு­தி­ய­ளிக்கின்றேன்.
ஐ.தே. கட்சி என்­பது நாட்­டுக்கு சுதந்­திரம் பெற்றுக் கொடுத்த கட்­சி­யாகும். நாம் ஒரு போதும் நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டோம். அரச மற்றும் தேசிய தலை­வர்­களை காட்டிக் கொடுக்­க­மாட்டோம்.
ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்­றதும் எஞ்­சி­யி­ருக்கும் சர்­வ­தேச புலி­க­ளையும் இல்­லா­தொ­ழிக்க செயற்­ப­டுவோம்.
ஜனா­தி­பதித் தேர்­தலில் எதி­ரணி வெற்றி பெறுவதால் மீண்டுமொரு சதி செய்து தனி நாடொன்றை உருவாக்கிக் கொள்ள முடியுமென சர்வதேச புலிகள் நினைத்தால் அது ஒரு போதும் நிறைவேறாது.
எதிரணியின் பிரதான கட்சியான ஐ.தே. கட்சியின் பிரதித்தலைவர் என்ற ரீதியில் இதை நான் உறுதிபட தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

ad

ad