புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2014

பாகிஸ்தானில் பாடசாலைக்குள் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு ; 100 மாணவர்கள் சாவு (இரண்டாம் இணைப்பு) 

பாகிஸ்தான் இராணுவ பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இதில் 80 மாணவர்கள் உள்ளடங்குவதாக சந்தேகிக்கப்படுகிறது. 
 
(முதலாம் இணைப்பு)
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள இராணுவ பாடசாலை மற்றும் கல்லூரிக்குள் புகுந்த தெரிக்-இ-தலிபான் இயக்க தீவிரவாதிகள்  அங்கிருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். 
 
இதில் 16 குழந்தைகளும், ஒரு ஆசிரியரும், இராணுவ வாகன ஓட்டுனரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். காயமடைந்த 45 இற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்கள் 500 பேரை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தீவிரவாதிகள் இராணுவ உடையணிந்து படசாலைக்குள் நுழைந்ததாக சம்பவத்தை பார்த்த ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு தெரிக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்பதாக கூறியுள்ளதுடன், ஆறு தீவிரவாதிகளும் தற்கொலைப்படையாக பாடசாலைக்குள் புகுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 
தீவிரவாதிகள் பாடசாலைக்குள் புகுந்ததையடுத்து சுற்றி வளைத்த பாகிஸ்தான் இராணுவம் தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நீடித்து வருவதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

ad

ad