புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2014

25 மாவட்டங்களில் 22ல் வெற்றி நிச்சயம்!- பொது வேட்பாளர் மைத்திரி
25 மாவட்டங்களில் 22 மாவட்டங்களின் வெற்றி உறுதி என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எங்களுக்கு தற்போது கிடைத்துள்ள உண்டையான தகவல்களின் படி, 25 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் பொது வேட்பாளரின் அன்னப்பறவை சின்னம் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
ஸ்ரீகோத்த கட்சி தலைமையகத்திற்கு முன்னாள் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சவின் குண்டர்கள் வந்து தாக்குதல் மேற்கொண்டனர். அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் வசந்த பண்டார ஆகியோரே அவர்களை அனுப்பியுள்ளனர் எனவும் சாட்சியுடன் நிரூபணமாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad