புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2014

திட்டமிட்டப்படி வெளியாகிறது லிங்கா: ரசிகர்கள் கொண்டாட்டம்

லிங்கா படத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த நிபந்தனைப்படி ரூபாய் 3 கோடியை ரொக்கப் பணமாக நீதிமன்றத்தில் படத் தயாரிப்பாளர் செலுத்தியதால், திட்டமிட்டப்படி வெள்ளிக்கிழமை படம் வெளியாகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தின் கதை தன்னுடையது என்று கூறி, மதுரையைச் சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. 5 கோடி ரூபாயை ரொக்கப் பணமாகவும், மேலும் 5 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதத்தையும் பிணைத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்துமாறு  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து நிபந்தனைப்படி, முதற்கட்டமாக செலுத்த வேண்டிய ரூபாய் 3 கோடியை பட தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் செலுத்தியதால், வெள்ளிக்கிழமை படம் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது. ரஜினியின் பிறந்த நாளில் லிங்கா வெளியாவதால், ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ad

ad