றணிலையும் இணைப்பேன் ஒரு கோப்பை தேநீர் போதும் என்கிறார் ஜனாதிபதி மகிந்த
நீங்கள் எங்கள் செயலாளரை எடுத்தால் நாங்களும் உங்கள் செயலாளரை எடுப்போம். திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை.
இரண்டு பேரும் உட்கார்ந்து கோப்பி ஒன்றுதான் குடித்தோம். நாங்கள் நினைத்தால் ரணிலையும் எங்கள் பக்கம் எடுக்க முடியும்.
ஒரு கோப்பை தேநீர் கொடுத்தால் ரணிலும் எங்களோடு இணைந்து விடுவார் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அநுராதபுரத்தில் நடைபெறும் முதலாவது பிரசா ரக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், எங்களுடைய இராணுவம் ஒரு நாளும் பொது மக்களை கொலை செய்யவில்லை .
ஆரம்பத்தில் மக்கள் என்னிடம் யுத்தத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அவர்க ளுக்காக நான் யுத்தத்தை நிறுத்தினேன்.
அதன் பின்பு நாட்டை அபிவிருத்தி செய்யுமாறு கேட்டு கொண்டனர். அதனையும் நான் நிறைவேற்றினேன்.
மேலும் என் கையில் இரத்தம் படியவில்லை; படிந்தால் கையை வெட்டி வீசிவிடுவேன். இம்முறை நான் ஜனாதிபதியான பின்பு அநுராதபுர மக்களுக்கு சுத்தமான குழாய் நீர் வழங்குவதே எனது திட்டமாகும்.
நாங்கள் இந்த முறை குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து வரவு செலவு திட்ட த்தினை செய்யவில்லை.
மக்களோடு இறங்கி வந்து அவர்களுடைய கஷ்டத்தினை அறிந்து இந்த வரவு செலவு திட்டத்தினை தயாரித்துள்ளோம்.
எதிர்வரும் காலத்தில் நாட்டினை ஒற்றுமையான பாதையில் கொண்டு செல்வதே எனது நோக்க மாகும்.அனைவரும் பொறுமையாக இருந்து இந்த ஜனாதிபதி தேர்தல் வெற்றியினை பாருங்கள் என்று தெரிவித்தார்.