புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2014

news
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து, சென்னையில் மாநாடு  நடத்தப்படவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் இதில் விவாதிக்கப்பட உள்ளது. இலங்கையை சேர்ந்த சில வல்லுனர்களும், இலங்கை தமிழர் நலனில் அக்கறை கொண்ட அமைப்புக்களையும் சேர்ந்த தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
இந்த மாநாடு‘இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வை நோக்கி, ‘இந்திய மீனவர்கள் பிரச்சினையில் தீர்வை நோக்கி’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
 
இதில், இலங்கை பிரச்சினையில் தீர்வை நோக்கி என்ற கருத்தரங்கில் அண்மையில் இலங்கை சென்று வந்த பா.ஜ.க.தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் பங்கேற்கிறார்.
 
இந்திய மீனவர்கள் பிரச்சினையில் தீர்வை நோக்கி என்ற தலைப்பில் நடைபெறும் கருந்தரங்கில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொள்கிறார்.
 
கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டு, இலங்கை பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை பிரச்சினை குறித்து சென்னையில் மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் தெரிவிப்பு 

ad

ad