புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2014


கள்வர்களும் புலிப் பயங்கரவாதிகளும் சுதந்திரக் கட்சியில் பதவி வகிக்கின்றனர்!– சந்திரிக்கா
தேசப்பற்றாளர்களினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இன்று கள்வர்களும் புலிப் பயங்கரவாதிகளும் பதவிகளை வகித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் தொம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவி வரும் ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களை இல்லாமல் செய்யும் நோக்கிலேயே இரண்டு தரப்பிலிருந்து போட்டியிடும் சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய இடதுசாரி கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன.
எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க உள்ளிட்ட தேசப்பற்றாளர்களினால் சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
இன்று கட்சியில் தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், கொள்ளையர்கள் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர்.
இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பின்றி அல்லலுறுகின்றனர்.
கல்வித்துறையில் பாரியளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கல்வி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
நாட்டின் மொத்த வளங்களும் ஒரு சில தரப்பினரால் அனுபவிக்கப்பட்டு வருகின்றது.
நாட்டின் நலனுக்காக சட்டம் ஒழுங்கு அமுல்படுத்தப்படாத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.
ஊழல் மோசடிகள் இல்லையென்றால் சம்பளத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad