புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2014

ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப படையினர் விலக்கிக் கொள்ளப்பட மாட்டார்கள்!- ஜனாதிபதி
ஐரோப்பிய நாடுகளும், ஏனைய நாடுகளும் விடுக்கும் கோரிக்கையை ஏற்று வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ருவான்வெலயில் நேற்று இடம்பெற்ற கூட்டம ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி,
வடக்கில் உள்ள படையினரில் 50 வீதத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
எனினும் அதனை அரசாங்கம் நிராகரித்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நாடு பிரிக்கப்படக்கூடாது என்பதற்காகவே வடக்கில் தொடர்ந்தும் படையினர் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

ad

ad