புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2014

தி.மு.க.வில் தலைவருக்கும், பொதுச்செயலாளருக்கும் மட்டும்தான் அதிகாரம் உள்ளது: மு.க.அழகிரி பேட்டி

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, புதன்கிழமை மாலை மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். 

கேள்வி:- உங்கள் நண்பர் ஜி.கே.வாசன் புதிதாக கட்சி தொடங்கி உள்ளாரே?

பதில்:- இது ஜனநாயக நாடு. யார் வேண்டும் என்றாலும் கட்சியை தொடங்க உரிமை உள்ளது. ஜி.கே.வாசனும் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இதில் தவறு எதுவும் இல்லை.

கேள்வி:- தி.மு.க.வில் இருந்து விலகியவர்களும், நீக்கப்பட்டவர்களும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே?

பதில்:- இவருக்கு அந்த அதிகாரம் யார் தந்தது?. தி.மு.க. கட்சியில் தலைவருக்கும், பொதுச்செயலாளருக்கும் மட்டும்தான் அந்த அதிகாரம் உள்ளது என்றார். 

மேலும் அவரிடம், “தி.மு.க. உட்கட்சி தேர்தலில் கோஷ்டி பூசல் அதிகமாகி இருக்கிறதே?” என கேட்டதற்கு பதில் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார். 

 

ad

ad