புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2014

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட நபர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் போது,கதற கதற நாடு கடத்தப்படும் இந்த நபர் யார்? எங்கு? எப்போது?
புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட நபர் சொந்த நாட்டிற்கு திருப்பி அழைக்கப்படும் போது கதற கதற நாடு கடத்தப்படும் இந்த நபர் யார்?

எங்கு? எப்போது?
என்னினமே எங்கள் மக்கள் படும் துயரம் பார்.. சொந்த மண்ணோ கொலைக்களமாக.. வந்த மண்ணோ மனிதம் செத்த பிணக்காடாக
வாழ வழியின்றி பல பாடு பட்டு உலகில் எங்கேனும் மனிதம் எஞ்சி இருக்கும் என உலகமெங்கும் ஏதிலியாக அலையும் எங்கள் இன
ம் உயிருக்காக தானே உலகம் எங்கும் கையேந்தி வாழ்கிறது. இதை அறியாத உலகம் நாம் வாழும் பூமியாக எம் மண்ணை மீட்க எம் கையே எமக்கு உதவி என போராடிய எம்மை நசுக்கி அழித்து விட்டு வாழ்தலுக்கான சூழல் இல்லா நரபலி பூமிக்கு எம் உறவுகளை திருப்பி அனுப்புவது எந்த விதத்தில் மாந்த நேயச் செயலாக அமையும்?
விலங்கு போட்டு நாடுகடத்தப்படும் இந்த தமிழர் தமிழராக பிறந்த பாவத்தை தவிர செய்த குற்றம் என்ன?
அச்சத்தில் இன்று அவர்களை மதியாமல் அநாகரீகமாக பேசுவதை பார்க்கும் வேற்றின மக்களே மனிதனை மனிதாக நடத்தாமல் தமிழனை ஓட ஓட விரட்டி அழிக்கின்றீர்களே? இது நீதியா? இது தான் உங்கள் தேசத்தின் மாந்த நேயமா?
ஸ்ரீலங்கா சிறைகளில் அரசியல் கைதிகள் சிறைகளுக்குள் அனுபவிக்கும் கொல்லப்படுவதும் கொடிய கொலை வதைகளுக்கு உள்ளாவதும் அறிந்த பின்னும் அவர்களுக்கான உரிமைகள் எப்படி கொடூரமாக பறிக்கப்படுகின்றன என அறிந்த பின்னும் மனித உயிர்களை பலி கொடுக்க துணிகின்ற நீங்கள் உண்மையிலே மனிதர்கள் தானா? இன்னமும் எத்தனை காலம் அடிமைகளாக இப்படி இழிவு படப் போகின்றோம்? விடுதலை ஒன்றே எமக்கு வழி! நாதியற்ற தமிழினமாக மிதி படும் கொடுமைகளில் இருந்து மீள எங்கள் நிலம் எமக்கு வேண்டும்
- See more at: http://www.canadamirror.com/canada/35260.html#sthash.10Y6QTxW.dpuf

ad

ad