புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2014

பாக்., பள்ளியில் 132 குழந்தைகளை சுட்டுக் கொன்ற
 தீவிரவாதிகள் புகைப்படம் 




தலீபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று கொடூரமான மிருகவெறி தாக்குதலை நடத்தி, அப்பாவி குழந்தைகளை கொன்று குவித்தது, உலகையே உலுக்கியது. 

பாகிஸ்தானில், பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 பள்ளிக்குழந்தைகள் உள்பட 141 சுட்டுக்கொல்லப்பட்டனர். தாக்குதல் தொடுத்த தீவிரவாதிகளில் ஒருவன், உடலில் கட்டி வந்த குண்டுகளை வெடிக்கச்செய்து உடல் சிதறி உயிரிழந்தார். மற்ற 5 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரை ஆனார்கள்.

தீவிரவாத தாக்குதலில் பலியான குழந்தைகளின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கத்தால், பெஷாவர் நகர் துயரத்தில் மூழ்கியது. மெழுகுவர்த்தி ஏற்றி குழந்தைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப், அவசர பயணமாக ஆப்கானிஸ்தான் சென்றார்.

 தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்குவது குறித்து அந்த நாட்டு ராணுவத்துடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். பெஷாவர் நகரில் முகாமிட்டுள்ள பிரதமர் நவாஸ் ஷெரீப், அனைத்து கட்சி மாநாட்டை கூட்டி, மரண தண்டனை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றியுள்ளார்.

இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தலீபான்கள் உடனடியாக பொறுப்பேற்றனர். இதுபற்றி அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் முகமது குராசானி பேசுகையில், “தற்கொலைப்படையினர் 6 பேர் இந்த தாக்குதல்களை நடத்தினர். 

வடக்கு வாஜிரிஸ்தானில் போராளிகளுக்கு எதிராக ராணுவம் எடுக்கிற நடவடிக்கைக்கு பழிக்கு பழிவாங்கத்தான் (ராணுவ பள்ளிக்கூடத்தை குறி வைத்து) இந்த தாக்குதல்கள். எங்கள் வலியை, வேதனையை அவர்கள் உணர வேண்டும் என்று விரும்புகிறோம்” என கூறினான். தற்போது பாகிஸ்தானில் பள்ளியில் 132 குழந்தைகள் உள்பட 141 பேரை சுட்டுக் கொலை செய்த தீவிரவாதிகளின் புகைப்படத்தை தலிபான் தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ளது. 

பாகிஸ்தானில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் தலீபான் தீவிரவாத இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் தலிபான் தீவிரவாத இயக்க தலைவன்தான், தீவிரவாத தாக்குதலை செயல்படுத்தியுள்ளான் என்றும் செய்திநிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad