புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2014

அரசில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் உடன் விலகி எதிரணியுடன் இணைந்து கொள்ளவும்! ஜனாதிபதி சட்டத்தரணி
இந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  அரசாங்கத்தில் இருக்கின்ற சகல முஸ்லிம் தலைவர்களும் விலகி பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொள்ளல் வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுகையிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று 35 கட்சிகள் இணைந்து கொழும்பு விகாரமகாதேவி பூங்கா உள்ளக அரங்கில் கைச்சாத்திட்ட நிகழ்வில் ஜனாப் சுகையிர் கலந்து கொண்டிருந்தார்.
இந் நிகழ்வில் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ்சின் எம்.பியும், ஈரான் நாட்டின் தூதுவராகவும், ருபாவாஹினி தலைவராகவும் கடமையாற்றியவர். எம்.எம். சுகையிர் விசேட போட்டியொன்றிலே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணியில்தான் பௌத்த இயக்கமான பொதுபலசேனாவும் இணைந்துள்ளது.
இந்த பொதுபலசேனா இயக்கம் முஸ்லிம்களுக்கு எதிராக காட்டிய அட்டகாசங்களை முஸ்லிம்கள் மறக்க மாட்டார்கள்.
நான் ஈரான் நாட்டின் தூதுவராக இருந்த காலத்தில் ஜனாதிபதியின் யுத்த வெற்றிக்கு அந்த நாட்டில் இருந்து பல உதவிகளை பெற்றுக் கொடுத்துள்ளேன்.
யுத்தம் ஓய்ந்த பின் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு பாரிய பிரச்சினைகள் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்பட்டன.
இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றிக்காக 30க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
இந்த வேட்பாளருக்கே சிறுபான்மை மக்களது ஆதரவு கிடைக்கும். இந்த ஆட்சியின் கீழ் இருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள் உடன் விலகி எதிர்கட்சி ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளருடன் ஒன்று சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் சுகையிர் தெரிவித்தார்.

ad

ad