புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2014

ஐ.எஸ்.ஐ.எஸ்சின் கட்டுப்பாட்டில் சிரிய போர் விமான தளம்

சிரியாவின் போர் விமான தளமொன்றைக் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் சிரியா மனித உரிமைகள் மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுளள்து.
சிரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தீயிர்-அல்-ஜூர் போர் விமான தளத்தைக் கைப்பற்ற கடந்த சில நாட்களாக ஐ.எஸ். தீவிரவாதிகள் கடும் தாக்குதல் மேற்கொண்டு வந்தது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், விமான தள வாயிற்பகுதியில் சனிக்கிழமை கார் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றது. இதையடுத்து, விமான தளம் பயங்கரவாதிகள் வசம் வீழ்ந்தது எனக் கூறப்படுகிறது.
தீயிர்-அல்-ஜூர் மாகாணத்தின் பெரும்பான்மையான பகுதிகள் ஐ.எஸ். பிடியில் சிக்கியிருந்த நிலையில், போர் விமான தளம் மட்டும் அரசுப் படையினர் வசம் இருந்து வந்தது.
இந்நிலையில், போர் விமான தளம் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ad

ad