புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2014

இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து அரையிறுதியில் சென்னை அணி
கேரளா அணியை வீழ் த்தி அரையிறுதிக்கு முன்னே றியது சென்னை இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) காற்பந்து போட்டியின் 45 ஆவது ஆட்டம் கொச்சியில்  நேற்று நடந்தது.

இதில் சென்னையின் எம்.சி. கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி புள்ளிகள் அடிப்படையில் அரை இறுதிக்கு முன்னேறும்.

ஆகையால் சென்னை அணி வீரர்கள் ஆக்ரோஷ மாக விளையாடினார்கள்.

அவர்களுக்கு இணையாக கேரளா அணி வீரர்களும் ஈடுகொடுத்து விளையாடி னார்கள். இதனால் முதல்பா தியில் இரு வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை.

இரண்டாவது பாதி நேரத்தின் 87 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் புருனோ பெலிஸ்சரி ஒரு கோல் அடித்தார்.

இதனால் சென்னை அணி 1-0 என முன்னிலை பெற்றது. கேரளா அணியால் இந்த கோலுக்கு எதிர்கோல் போட முடியவில்லை.

இதனால் சென்னை அணி தனது 6 ஆவது வெற்றியை பதிவு செய்து அரை இறுதி போட் டிக்கு முன்னேறியது
.

ad

ad