புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2014

தனது எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியாமலேயே சட்டப்பேரவைக்கு வந்து சென்ற விஜயகாந்த்!
தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கூடி தெரியாமலேயே சட்டப்பேரவைக்கு இன்று வந்த தே.மு.தி.க தலைவரும், எதிர்க்கட்சி் தலைவருமான விஜயகாந்த்
, வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு சென்றுவிட்டார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத்திற்கு வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு சென்று விட்டார்.

"சட்டப்பேரவையில் தனக்கு இருக்கை ஒதுக்கவில்லை. இதனால் தனது சட்டமன்ற கடமையை ஆற்ற முடியவில்லை" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

இந்நிலையில், தே.மு.தி.க.  தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், இன்று காலை சட்டப்பேரவைக்கு வந்தார். அவரும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துட்டுவிட்டு உடனடியாக காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார்.

அவர் வந்தபோது சட்டப்பேரவையில் கேள்வி நேரம் நடந்து கொண்டு இருந்தது. தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில்  அமர்ந்து இருந்தனர். விஜயகாந்த் வந்தது கூட அவர்களுக்கு தெரியவில்லை.  அவர் சென்ற பிறகுதான் இந்த தகவல் அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

ad

ad