புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2014

பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்து யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸால் ஆரம்பம்
அகில இலங்கை ரீதியில் பாட சாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கடந்த 19 ஆம் திகதி மேற்படி போட்டி ஆரம்பித்து வைக் கப்பட்டது.

முன்பதாக யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 13 பாடசாலைகளுக்கு முதற்கட்டமாக மேசைப்பந்தாட்டத்துக்கான மேசைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களிடம் வழங்கி வைத்தார்.

அத்துடன், பயிற்சி ஆசிரியர்களுக்கான சான்றிதழ்களையும் அமைச்சரே வழங்கி வைத் தார்.

யாழ்.மத்தியகல்லூரி அதிபர் எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றும் போது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேசைப்பந்தாட்ட விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினது ஆலோசனைக்கு அமைவாக முதற்கட்டமாக 13 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த பாடசாலைகளின் மாணவர்களுக்கு மேசை பந்தாட்ட துறையில் அக்கறையுள்ள, உணர்வுள்ள, விருப்பமுள்ளவர்களுக்கு அமைச்சர் லசந்த அழகியவன்னவின் முயற்சியால் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்த வகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளர் சந்தன பெரேராவிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை ரீதியிலான மேசைப் பந்தாட்ட போட்டிகள் இன்றும், நாளையும், மூன்று நாட்கள் நடை பெறுகின்றன.

இப்போட்டிகளை அகில இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கமும் யாழ்.மாவட்ட மேசைப்பந்தாட்ட சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளர் சந்தன பெரேரா, யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட துறைசார்ந்தோர் உடனிருந் தனர்.    

 

ad

ad