புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

வவுனியாவில் வெள்ள பாதிப்பு; வடக்கு மாகாண சபையின் நிவாரணப் பணிகள் ஆரம்பம்


news
நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் மக்கள் இடம்பெயர்ந்து ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியிருக்கின்றனர்.
 
இவ்வாறு வடக்கு மாகாணத்தில் இருப்பவர்களுக்கு வடக்கு மாகாணசபையால் மாவட்டம்தோறும் துரிதகதியில் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
 
அதன்படி வவுனியாவில் வடக்குமாகாண விவசாய அமைச்சின் உணவு வழங்கும் துறையும் சுகாதார அமைச்சும் இணைந்து உலர்உணவுப் பொதிகளையும் குழந்தைப்பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான அத்தியாவசியப் பொருட்களையும் விநியோகித்துள்ளன.
 
வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் நிவாரணப்பணிகள்  நேற்று இடம்பெற்றன. 
 
நிவாரணப்பணிகள் வழங்கும் பணிகளுக்கு வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராசா, இ.இந்திரராசா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
 
முதற்கட்டமாக புதியவேலர் சின்னக்குளம், வேடர்மகிழங்குளம், விளக்குவைத்தகுளம், மாதர் மாணிக்கர் மகிழங்குளம், கொந்தக்காரன்குளம், கதிரவேலர்பூவரசன்குளம், ஓமந்தை அரசன்குளம் ஆகிய இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
 
எனினும் வவுனியா மாவட்டத்தின் ஏனைய இடங்களில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கும் நிவாரணங்கள் விநியோகிக்கும் பணிகள் தொடாந்து இடம்பெறும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 

ad

ad