புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2014


மின்கம்பியில் சிக்கிய குரங்கை மற்றொரு குரங்கு தூக்கி உயிரூட்டிய நெகிழ்ச்சி சம்பவம்
ஒருவர் சாலையில் அடிப்பட்டு கிடந்தாலே கண்டும் காணாமல் செல்லும் இந்த உலகத்தில் ஐந்தறிவு படைத்த குரங்கு ஒன்று மின்தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு குரங்கை தூக்கி உயிரூட்டும் காட்சி காண்போரை நெகிழச் செய்துள்ளது. 

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் ரயில் நிலையத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு இருந்த மின்கம்பியில் திடீரென சிக்கிய குரங்கு ஒன்று அதிலிருந்து தூக்கிவிசப்பட்டு கீழே விழுந்தது. 

உயிரே இல்லாதது போன்று மயங்கி இருந்த அந்த குரங்கை மற்றொரு குரங்கு தூக்க முடியாமல் அதை தூக்கி தண்ணீரில் போட்டும் உடலில் லேசாக கடித்தும் நினைவு திரும்ப செய்துள்ளது. குரங்கை காப்பற்ற சக குரங்கு நீண்ட நேரம் போராடிய போதும் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதனை வேடிக்கை பார்க்கவும் புகைப்படம் எடுக்கவும் மட்டுமே ஆர்வம் காட்டியது வேதனைதக்கது.

ad

ad