புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2015

10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் விரைவில் குறைப்பு - 29ம் இடைக்கால வரவு செலவுத்திட்டம்


10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 29ம் திகதி பத்து அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளது.
நாட்டின் நிதி நிலைமை குறித்து அறிக்கை ஒன்றை கோரியுள்ளேன்.
இது வரை காலமும் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பொய்யான பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது.
உண்மை நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
மக்களுக்கு மிகவும் அவசியமான பத்து பண்டங்களின் விலைகள் குறைக்கப்படும் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ad

ad