புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

இடைக்கால பட்ஜெட்டுக்கு 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு ஜனவரி 30 முதல் சம்பள அதிகரிப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத் தின் இடைக்கால பட்ஜெட் எதிர்வரும் 29-ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதில் 100 நாள் வேலைத்திட்டங் களுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இடைக்கால பட்ஜெட் அமைச்சரவையின் அனுமதிக்காக வரும் 29-ம் திகதி சமர்ப்பிக்கப்படவு ள்ளது.

இது குறித்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கருத்து வெளியிடு கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் இடைக்கால பட்ஜெட்டில் நிறைவேற் றப்படும். ஆனால் முன்னைய அரசா ங்கம் திறைசேரியை காலியாக்கி விட்டது. இதனால் வருமானத்தை இனித்தான் தேட வேண்டும்.

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா சம்பளம் வரும் ஜனவரி 30 தொடக்கம் அதிகரிக்கப் படும்.

மறைமுகவரிகள் நீக்கப்ப டும். சமுர்த் திப் பயனாளிகளுக்கு 200 ரூபா அதிகரிக்க ப்படும்.

பல்கலைக்கழக மாணவர்க ளுக்கான \'மகாபொல\' புலமைப்பரிசில் அதிகரிக்கப்படும், ஓய்வூதியர்களுக்கு 3500 ரூபா ஓய்வூதிய இடைக்காலக் கொடுப்பனவும் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கத்தின் 100 நாள் திட்டங்களுக்கு 89 ஆயிரம் கோடி ரூபா தேவைப்படும் என எதிர்க்கட்சிகளில் ஒன்றான பவித்திரு ஹெல உறுமயவின் தலைவர் கம்மன்பில தெரிவித்தார். 

ad

ad