சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற ஒரு வயது ஆண் குழந்தை எழும்பு நோயினால் பாதிக்கப்பட்டான். சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் குழந்தை பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டான்.
அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு ரூ.20 லட்சம் தேவைப்படுவதாக பேஸ் புக்கில் தகவல் வெளியானது. அதை பார்த்த நடிகர் விஜய், குழந்தையின் மருத்துவ செலவுக்கு ரூ.2 லட்சம் வழங்கினார். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.1 லட்சம் வழங்கியிருக்கிறார்.