புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் : 3 பேரில் யாரை தேர்வு செய்வார் ஜெ.,

ஸ்ரீரங்கம் அ.தி.மு.க., வேட்பாளர் தேர்வு, முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு, அடுத்த மாதம் 13ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, ஏராளமானோர் விருப்பம் தெரிவித்தனர். அவர்களில், இரண்டு பெண்கள் உட்பட, 12 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம், முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர், நேர்காணல் நடத்தினர். 

நேர்காணல் முடிவில், பெண் வழக்கறிஞர் வளர்மதி உட்பட மூன்று பேரை தேர்வு செய்தனர். அவர்களில் ஒருவரை, ஜெயலலிதா தேர்வு செய்து வேட்பாளராக அறிவிக்க உள்ளார்.

மூன்று பேரில் யாரை அறிவிக்கப்போகிறார் ஜெயலலிதா என்று கட்சியினரிடையே பரபரப்பு நிலவுகிறது.

ad

ad