காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், மத்திய அரசின் செயல்பாட்டில் ராகுல் தலையிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் தலைமை மீது புகார் கூறினார்.
இதனைக்கண்டித்து இன்று சென்னையில் உள்ள ஜெயந்தி நடராஜன் இல்லத்தை இளைஞர் காங்கிரசார் முற்றுகையிட்டனர்.
அப்போது ராகுலை தவறாக பேசிய ஜெயந்தி நடராஜனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆருண் தலைமையில் 41 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.