புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2015

மைத்திரிபால 5 மாவட்டங்களில் மட்டுமே வெற்றியீட்டுவார்: டலஸ் அழப்பெரு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஐந்து மாவட்டங்களில் மட்டுமே வெற்றியீட்டுவார் என இளைஞர் விவகார அமைச்ர் டலஸ் அழ்பெரும தெரிவித்துள்ளார்.
14 மாவட்டங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெளிவான வெற்றியை பதிவு செய்வார்.
ஏனைய மாவட்டங்களில் கடுமையான போட்டி நிலவும் என ஆய்வு திட்டமிடல் மற்றும் மனித வள அபிவிருத்தி நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
160 தேர்தல் தொகுதிகளில் 106 தேர்தல் தொகுதியில் ஜனாதிபதி மஹிந்த வெற்றியீட்டுவார்.
43 தேர்தல் தொகுதிகளில் மட்டுமே மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவார்.
மேலும் 11 தேர்தல் தொகுதிகளில் யார் வெற்றியீட்டுவார் என்பது பற்றிய தெளிவான முடிவுகள் கிடைக்கவில்லை.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த 54.07 வீத வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 38.7 வீத வாக்குகளையுமே பெற்றுக்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.

ad

ad