கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மருதூரில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள், தவறிப்போய் அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்துவிட்டன. இப்பன்றிகளை மீட்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீவிர முயற்சி எடுத்தனர். ஆனால், அவற்றை மீட்க விடாமல் கிராம மக்கள் தடுத்தனர்.
பயிர்கள் அழிவதை தடுக்க வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர். தீயணைப்புத்துறையினர் போராடியும் கிராம மக்கள் மறியல் செய்து நிற்கின்றனர்.
இந்த பிரச்சனையில் கிணற்றில் விழுந்த பன்ரிகளில் 6 பன்றிகள் உயிரிழந்தன. 24 பன்றிகள் தண்ணீரில் தவிக்கின்றன. உயிருக்கு போராடும் அப்பன்றிகளை காப்பாற்ற தீயணப்பு துறையினர் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன.