புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2015

ரஷிய கால்பந்து வீரர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை!


ரஷியாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் கசான் மகோமெதோவ், தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் வடக்கு காகசஸின் டாஜெஸ் பகுதியில் உள்ள அன்ஷி மகா செக்கலா தேசிய கால்பந்து லீக் கிளப் அணியில் விளையாடி வந்தார். இங்கு தீவிரவாதிகளுக்கும், ரஷிய ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மகோமெதோவ் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் இவர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதனால் இவர் படுகாயம் அடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவரை சுட்டு கொன்றது யார் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
ரஷியாவில் வருகிற 2018ம் அண்டில் உலகக்கிண்ண கால்பந்து போட்டி நடக்கிறது. இந்த சமயத்தில் கால்பந்து வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ரஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad