விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்காட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’’ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுகவை ஆதரரிப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்னும் இரண்டு தினங்களில் முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’அமைச்சர்கள் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பரப்புரை செய்யக்கூடாது. அவர்கள் பரப்புரை செய்தால் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்பிருக்கிறது’’ என்று தெரி வித்தார்.